பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

விராலிமலை அருகே ஆம்னி பேருந்து - கார் மீது மோதி விபத்து: 28 பேர் காயம்!

விராலிமலை அருகே ஆம்னி பேருந்து - கார் மீது மோதி விபத்து தொடர்பாக...

News image

விபத்தில் நெறுங்கி கிடக்கும் கார்.

Updated On :26 அக்டோபர் 2025, 10:38 am IST

விராலிமலை: விராலிமலை அருகே ஆம்னி பேருந்து எதிரே வந்த கார் மீது மோதிய விபத்தில் 28 பயணிகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் இருந்து 43 பயணிகளை ஏற்றிக் கொண்டு நேற்று(அக். 25) இரவு தனியார் ஆம்னி பேருந்து சென்னை நோக்கி சென்றுள்ளது. பேருந்தை தேனி மாவட்டம், கம்பம் புதுபள்ளி வாசல் தெருவைச் சேர்ந்த முகமது இப்ராஹீம் மகன் முகமது அன்சாரி (38) ஓட்டி வந்தார்.

பேருந்து, விராலிமலை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பூதகுடி சுங்கச்சாவடி அருகே உள்ள மேட்டுப்பட்டி அருகே நள்ளிரவு சென்ற போது எதிரே தவறான பாதையில்(ராங் ரூட்) கார் ஒன்று வேகமாக வந்துள்ளது.

காரை திருச்சி பொன் நகர், நியூ செல்வன் நகர் மாரியம்மன் அவுன்யூவை சேர்ந்த முத்தையா மகன் பரத் குமார் (27) ஓட்டி வந்துள்ளார். அப்போது தவறான பாதையில் வந்த காரை கவனிக்காத பேருந்து ஓட்டுநர் முகமது அன்சாரி, பேருந்தை காரின் மீது பயங்கரமாக மோதியுள்ளார்.

இதில், கார் மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகள் 28 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை மீட்ட அப்பகுதியினர் திருச்சி, விராலிமலை மற்றும் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

நிகழ்விடம் சென்ற விராலிமலை போலீஸார் கிரேன் மூலம் வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீராக்கினர்.

தொடர்ந்து, விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Summary

28 passengers are receiving treatment at the hospital after an Omni bus collided with an oncoming car near Viralimalai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.