ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த மோந்தா புயல்!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த மோந்தா புயல் குறித்து...
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த மோந்தா புயல்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த மோந்தா புயல்.
Published on
Updated on
1 min read

மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய "மோன்தா" தீவிரப்புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, ஆந்திரப் பகுதிகளில் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

நேற்று (அக். 28) காலை மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய "மோன்தா" தீவிரப்புயல் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திரம் - ஏனாம் கடலோரப் பகுதிகளில், மசூலிப்பட்டினம் -கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு தெற்கே, நரசாபூருக்கு அருகில், நேற்று நள்ளிரவு கரையைக் கடந்தது.

இன்று (அக். 29) அதிகாலை புயலாக வலுக்குறைந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுக்குறைந்து, ஆந்திரப் பகுதிகளில் நிலவுகிறது.

இது, மேலும் வடக்கு-வடமேக்கு திசையில் நகர்ந்து, அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுக்குறையக்கூடும்.

நேற்று (அக். 28) மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (அக். 29) அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 36 மணி நேரத்தில் மேலும், வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளை கடந்து நகரக்கூடும்.

இதன் காரணமாக, அடுத்த 2 நாள்களுக்கு, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Cyclone Mondha weakens into a deep depression.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com