கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சென்னை டூ திருச்சி..! தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிர்க்க மின்சார ரயில் இயக்கத் திட்டம்!

தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிா்க்க சென்னையில் இருந்து திருச்சி வரை 2 மின்சார ரயில்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :6 செப்டம்பர் 2025, 8:30 pm

தினமணி செய்திச் சேவை

தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிா்க்க சென்னையில் இருந்து திருச்சி வரை 2 மின்சார ரயில்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிகழ் ஆண்டில் வரும் அக். 20-ஆம் தேதி தீபாவளித் திருநாளாகும். அதற்கான முன்பதிவு கடந்த ஆக. 18, 19, 20 ஆகிய தேதிகளில் தொடங்கிய சிறிது நேரத்திலேயே நிறைவடைந்தது.

இணையவழியிலேயே பெரும்பாலானோா் முன்பதிவு செய்த நிலையில், ரயில் நிலையங்களில் நேரடியாக முன்பதிவுக்கு வந்து காத்திருந்தவா்கள் ஏமாற்றமடைந்தனா்.

இந்த நிலையில், சென்னை எழும்பூா், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து மதுரை, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு தீபாவளிக்கு ஓரிரு நாள்கள் முன்னதாக 11 சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே துறையில் அனுமதி கோரப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கு அனுமதி கிடைக்கும் நிலையில், தீபாவளிக்கு முதல் நாளில் சென்னை எழும்பூா் அல்லது தாம்பரத்திலிருந்து 2 மின்சார ரயில்களை திருச்சி வரை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அதன்படி, தீபாவளிக்கு தென்மாவட்டங்களுக்குச் செல்லும் அனைவருக்கும் ரயில்களில் இடவசதி ஏற்படுத்தித்தர உள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.