மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

விராலிமலையில் ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்!

விராலிமலையில் ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது தொடர்பாக...

News image

விராலிமலையில் ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்.

Updated On :9 செப்டம்பர் 2025, 1:54 pm IST

விராலிமலையில் ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக, விராலிமலை சுற்றுப்பகுதி தெருக்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளைக் குறிவைத்து தெருநாய்கள் சுற்றிவருகின்றன.

இவ்வாறாக சுற்றித்திரியும் நாய்கள் ஒருசில நேரங்களில் சிறுவர்கள், பாதசாரிகளை கடித்து விடுகின்றன, சில நாய்கள் வாகனத்தில் செல்வோரை விரட்டி செல்கினறன. நாய் கடித்துவிட்டால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரிடும் என்ற எண்ணம் பொதுமக்களிடம் இருந்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நாய் கடித்து மனிதர்கள் மட்டுமல்லாது கால்நடைகளும் சிகிச்சைப் பெற்று வருகின்றன.

இதன்காரணமாக, விராலிமலை ஊராட்சி மன்றம் மற்றும் கால்நடை துறை இணைந்து தெரு நாய்களுக்கு இன்று(செப். 9) ரேபீஸ் தடு்ப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

முதற்கட்டமாக சிதம்பரம் கார்டன், முத்து நகர், தேரடி கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த 20 நாய்களை ஊராட்சி பணியாளர்கள் மூலம் வலை வைத்து பிடித்து, விராலிமலை கால்நடை மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

வரும் நாள்களில் இப்பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று விராலிமலை ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Rabies vaccination work has begun in Viralimalai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.