சிதம்பரம்: மதுபோதையில் கூகுள் மேப்பை பின்பற்றி காரை இயக்கிய ஓட்டுநர், தவறுதலாக கடலுக்குள் காரை இறக்கியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த 5 பேர், கடலூர் வழியாக காரில் பயணம் செய்துள்ளனர். கடலூர் துறைமுகத்திலிருந்து பரங்கிப்பேட்டை வரை கடற்கரை சாலையில் வியாழக்கிழமை அதிகாலை கூகுள் மேப் வழிகாட்டுதலைப் பின்பற்றி பயணம் செய்துள்ளனர்.
கடலூர், சொத்திகுப்பம் பகுதி அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது மதுபோதையில் கடற்கரை மணலில் காரை இறக்கியுள்ளனர்.
4 வீல் டிரைவ் கார் என்பதால், காரை மணலுக்குள் இறக்கி வேகமாக ஓட்டியுள்ளனர். மதுபோதையில் கார் கடலிலும் செல்லும் என நினைத்து, காரை திடீரென கடலுக்குள் ஓட்டியுள்ளனர்.
சிறிது தூரம் கடலுக்குள் சென்ற கார் திடீரென நின்றுவிட்டது. மதுபோதையில் கடலில் தத்தளித்தவர்களை அப்பகுதி மீனவர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.

டிராக்டர் உதவியுடன் கார் மீட்பு - DPS
பின்னர், காவல்துறையினரின் உதவியுடன் டிராக்டர் மூலம் இவர்கள் பயணம் செய்த கார் கட்டி இழுக்கப்பட்டது. போர் வீல் டிரைவிங் காரினை கடலுக்குள் ஓட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Summary
A drunk driver accidentally drove his car into the ocean while following Google Maps.
இதையும் படிக்க : பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீரிருப்பு கோயிலில் பூக்குழித் திருவிழா

சிவகிரி திரௌபதியம்மன் கோயிலில் பூக்குழி

கிருஷ்ணாபுரம் குறுக்கிட்டான் கருப்பசாமி கோயிலில் பூக்குழி விழா

கியா கார்களுக்கு ரூ. 2.70 லட்சம் வரை சலுகை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



