ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

விஜயகாந்தைவிட விஜய் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்: டிடிவி தினகரன்

தவெக தலைவர் விஜய் குறித்து டிடிவி தினகரன் பேச்சு.

டிடிவி தினகரன் (கோப்புப்படம்)

Published On :21 செப்டம்பர் 2025, 10:05 am IST

விஜயகாந்த் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தினாரோ, அதைவிட அதிகமான தாக்கத்தை எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் ஏற்படுத்துவார் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில், செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரம் சட்டமன்ற தொகுதி அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்றப் பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய டிடிவி தினகரன், "சட்டப்பேரவைத் தேர்தலுக்காக 4 கூட்டணிகள் அமையவுள்ளன. திமுக, அதிமுக, சீமான், விஜய் என கூட்டணிகள் அமையும்.

எங்களது கட்சியின் நிலைபாட்டை டிசம்பர் மாதம் தெரிவிப்போம். 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயகாந்த் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினாரோ, அதைவிட அதிகமான தாக்கத்தை விஜய் ஏற்படுத்துவார்.

உங்களின் கணிப்பைத்தாண்டி தவெகவின் தாக்கம் அதிகமாக இருக்கும். 2026 தேர்தலுக்குப் பிறகு, பழனிசாமியின் பொதுச்செயலாளர் பதவிக்கு முடிவுரை எழுதப்படும். அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, பழைய அதிமுகவை உருவாக்கிட நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

புரட்சித்தலைவர் ஆரம்பித்த அதிமுக இன்றைக்கு இல்லை. தற்போது இருப்பது எடப்பாடி திராவிட முன்னேற்றக் கழகம்தான்” என்றார்.

Summary

TTV Dhinakaran speaks about TTV leader Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.