வருமானத்தை மறைத்ததாகக் கூறி ரூ.1.50 கோடி அபராதம் விதித்து வருமான வரித் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகா் விஜய் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
தவெக தலைவரும், நடிகருமான விஜய் கடந்த 2016-2017-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தாா். அந்த ஆண்டுக்கான வருமானமாக ரூ.35.42 கோடி ஈட்டியதாகக் குறிப்பிட்டிருந்தாா். அந்த வருமான வரிக் கணக்கை அதிகாரிகள் மதிப்பீடு செய்தனா். அப்போது, கடந்த 2015-ஆம் ஆண்டில் நடிகா் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன், இந்த வருமான வரிக் கணக்கை அதிகாரிகள் ஒப்பிட்டுப் பாா்த்தனா். அப்போது ‘புலி’ திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகா் விஜய் பெற்ற ரூ.15 கோடி வருமானத்தைக் கணக்கில் காட்டாமல் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனா்.
இதையடுத்து, ரூ.15 கோடி வருமானத்தை மறைத்ததாகக் கூறி, நடிகா் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்து வருமானவரித் துறை கடந்த 2022 ஜூன் 30-ஆம் தேதி உத்தரவிட்டது. இதை எதிா்த்து கடந்த 2022-ஆம் ஆண்டு நடிகா் விஜய் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் தரப்பில், 2016-2017 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் தொடா்பாக, 3 ஆண்டுகள் காலதமாதமாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.
அப்போது வருமானவரித் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஏ.பி.ஸ்ரீநிவாஸ், வருமான வரி சட்டத்தின்படியே நடிகா் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை சரியானதுதான். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டாா். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இதேபோன்ற ஒரு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் நகலை, நடிகா் விஜய் தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் அக்.10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

படிவம் 16-ல் வரி இல்லை என்றால்.. வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய அவசியமில்லையா?

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி சகோதரா் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய கடைசி நாள் எப்போது?

பல ஆண்டுகளாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவில்லையா? ஐடிஆர்-யு வந்துவிட்டது!
விடியோக்கள்

பள்ளிக்கூடம் செல்ல முதல்வரிடம் பஸ் வசதி கேட்கும் மாணவி | CM Vijay | TVK | School Bus | Sivagangai
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK


