கரூர் தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணத் தொகை பகிர்ந்தளிக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
கரூரில் சனிக்கிழமை நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி, பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை ஆறுதல் தெரிவித்தார் .
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய செல்வப்பெருந்தகை, ”கரூர் சம்பவம்போல் வேறு எங்கேயும் இதுபோல நடக்கக் கூடாது, முதல்வரின் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது.
நெரிசலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரூ. 1 கோடி நிவாரணத் தொகையை எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் மூலமாக வழங்கயிருக்கிறோம். இது முதல்கட்ட நடவடிக்கை மட்டுமே, இரண்டாம் கட்டமாக மக்களவை உறுப்பினர் ஜோதி மணியிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு மீண்டும் உதவி செய்ய தயாராக இருக்கிறோம்” என்றார்.
மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அடுத்த 3 நாள்களுக்கு துக்கம் கடைபிடிப்பதோடு, நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்துசெய்யப்படும் என்று, சமூக வலைதளப் பக்கத்தில் கு.செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: கரூர் பலி: உடல்களைக் காண முற்பட்ட சீமானை உறவினர்கள் முற்றுகை
Summary
Rs. 1 crore relief for the families of those killed in the Karur stampede, congress announcement.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரூர் பலி: அரசுப் பணி வழங்கலாம்; ஆனால்...! மதுரை அமர்வு முக்கிய உத்தரவு!

கரூர் பலி! வழக்கின் தன்மையை அரசுப் பணி நீர்த்துப் போக செய்யும்! மார்க்சிய கம்யூ.

கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்! கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பத்துக்கு அரசுப் பணி?







