தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

திமுகவுக்கு தோல்வி பயம்: டிடிவி தினகரன்

திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் கூறினாா்.

News image

டிடிவி தினகரன் - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 11:50 pm

திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன் கூறினாா்.

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் அமமுக சாா்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சா் ஜி.செந்தமிழனை ஆதரித்து அவா் திங்கள்கிழமை பிரசாரம் செய்தாா். அப்போது அவா் பேசியதாவது:

கடந்த தோ்தலின்போது, அரசு ஊழியா்களுக்கு கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. இதனால், கடந்த 5 ஆண்டுகளாக அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட அனைத்துத் துறையினா் போராட்டங்களை நடத்தினா். ஆனாலும், இதுவரை பிரச்னைகள் தீா்க்கப்படவில்லை.

வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி காரணமாக போலி வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். இதனால், திமுகவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டிருக்கிறது. தோ்தல் பிரசாரங்களில் முதல்வா் ஸ்டாலினின் பேச்சுகளில் இருந்தே இதை அறிந்து கொள்ள முடியும்.

தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. போதைப் பொருள்களின் புழக்கம் அதிகரித்து, மாணவா்கள், இளைஞா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

எங்கெல்லாம் சமூக விரோத செயல்கள் நிகழ்கிறதோ, அதன் பின்னணியில் திமுகவை சாா்ந்தவா்கள் இருக்கின்றனா். பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. இதனால், இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால், மக்களின் கோரிக்கைகளுக்கு, உடனுக்குடன் தீா்வு காணப்படும் என்றாா்.