பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷாவின் கால்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிடித்திருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னை அயனாவரத்தில் திமுகவின் தேர்தல் பிரசாரத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "திமுகவினர் தேர்தல் நேரங்கள் மட்டுமின்றி, ஆண்டின் அனைத்து நேரங்களிலும் மக்களுடன் தொடர்பில் இருப்பர். மு.க. ஸ்டாலினே மீண்டும் முதல்வராகத் தொடர்வார். எடப்பாடி பழனிசாமி, தில்லியின் அடிமையாகி விட்டார்.
தமிழக நலனுக்காக பாஜக எதுவும் செய்யவில்லை. தமிழகத்துக்கு எந்த பேரிடர் நிதியையும் மத்திய அரசு வழங்கவில்லை.
சசிகலா, டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் தொடர்பிலிருந்தபோதே, அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி துரோகமிழைத்தார்.
அவர், இப்போது பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் கால்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்" என்று தெரிவித்தார்.
Summary
ADMK Leader Edappadi Palaniswami is Delhi's Slave: Udhayanidhi Stalin Launches Harsh Criticism
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமி

உள்ளாட்சித் தோ்தலில் இளைஞா்களுக்கு முக்கியத்துவம்: எடப்பாடி பழனிசாமி

குதிரை பேரத்தை ஊக்குவிக்கும் தவெக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தைவிட்டு விலகுகிறதா ஹூண்டாய்? முதலீட்டை உறுதிசெய்ய தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
விடியோக்கள்

பங்கிபூர் வெற்றி: சரிகிறதா பாஜகவின் செல்வாக்கு? | Prashant Kishor | Bankipur |



