சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தில்லியின் அடிமை இபிஎஸ்: உதயநிதி கடும் தாக்கு

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷாவின் கால்களை எடப்பாடி பழனிசாமி பிடித்திருப்பதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

News image

எடப்பாடி பழனிசாமி | உதயநிதி ஸ்டாலின் - சித்திரிப்பு

Updated On :8 ஏப்ரல் 2026, 2:34 pm

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷாவின் கால்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிடித்திருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னை அயனாவரத்தில் திமுகவின் தேர்தல் பிரசாரத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "திமுகவினர் தேர்தல் நேரங்கள் மட்டுமின்றி, ஆண்டின் அனைத்து நேரங்களிலும் மக்களுடன் தொடர்பில் இருப்பர். மு.க. ஸ்டாலினே மீண்டும் முதல்வராகத் தொடர்வார். எடப்பாடி பழனிசாமி, தில்லியின் அடிமையாகி விட்டார்.

தமிழக நலனுக்காக பாஜக எதுவும் செய்யவில்லை. தமிழகத்துக்கு எந்த பேரிடர் நிதியையும் மத்திய அரசு வழங்கவில்லை.

சசிகலா, டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் தொடர்பிலிருந்தபோதே, அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி துரோகமிழைத்தார்.

அவர், இப்போது பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் கால்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்" என்று தெரிவித்தார்.

Summary

ADMK Leader Edappadi Palaniswami is Delhi's Slave: Udhayanidhi Stalin Launches Harsh Criticism

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.