விழிப்புடன் வாக்குகளைப் பதிவு செய்யுமாறு புதுவை மக்களுக்கு தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
புதுவை யூனியன் பிரதேசத்தின் 30 தொகுதிகளுக்கு இன்று(ஏப். 9) ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
என். ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக களம் காண்கிறது. சுமார் 9.50 லட்சம் வாக்காளர்கள் இன்று வாக்களிக்கின்றனர்.
காலை 11 மணி நிலவரப்படி 37.06 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில்,
"புதுச்சேரி வாக்காளர் பெருமக்களே, இன்னும் சில மணிநேரங்களே உள்ள இத்தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவுறப்போகும் கடைசி மணித்துளி வரை விழிப்புடன் இருந்து உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
Summary
TVK leader Vijay urges puducherry people that Cast your votes vigilantly
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடலூரில் விஜய் பிரசாரம் நடைபெறுமா? புதுவை தேர்தலால் ஒத்திவைப்பு!

திமுக கூட்டணியில் விசில் சப்தம் பலமாகக் கேட்கிறது: விஜய்

விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!
விஜய் பிரசாரத்தால் மக்களுக்கு அசௌகரியம்: வழக்குப்பதிய காரணம் இதுதான்!
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

