ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

பிரதமர் வேட்பாளராக இருந்த அருமைச் சகோதரர் ராகுல் காந்தி! - முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் நீட் விலக்களிக்கப்பட்டிருக்கும்...

News image

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் - @arivalayam

Updated On :11 ஏப்ரல் 2026, 9:31 pm IST

புதுக்கோட்டை : தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்றைய பிரசாரத்தில், ‘பிரதமர் வேட்பாளராக இருந்த அருமைச் சகோதரர் ராகுல் காந்தி’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று(ஏப். 11) நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசியதாவது :

“நான் ஏற்கெனவே பல முறை சொல்லியிருக்கிறேன் - ‘நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு’. மத்தியில் ‘இந்தியா கூட்டணி’ ஆட்சி அமைந்திருந்தால், நீட் தேர்வு தமிழகத்தில் இருந்திருக்காது. அதற்கான உறுதியை, பிரதமர் வேட்பாளராக இருந்த அருமைச் சகோதரர் ராகுல் காந்தியே பேசியிருக்கிறார்; பல கூட்டங்களில் பேசியிருக்கிறார்.

ஆனால், கூட்டணி கட்சிகள் தயவுடன் ஆட்சியமைக்கிற பிரதமர் மோடியைப் பார்த்து, தமிழகத்துக்கு நீட் விலக்கு தாருங்கள் என்று எடப்பாடி பழனிசாமியால் கேட்க முடியுமா?

நீட் தேர்விலிருந்து விலக்கு பெற நாங்கள் சட்டப்பூர்வமாகப் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம்.

கொள்கையை விற்றுப் பிழைக்கும் அவர்கள் கூட்டத்துக்கு, சுய மரியாதை உரிமைகளும் இருக்காது; மாநில உரிமைகளும் புரியாது” என்றார்.

Summary

M. K. Stalin names his brotherhood comrade Rahul Gandhi in Pudukkottai election rally

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.