மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மாற்றுப் பணியில் சென்ற ஆசிரியா்கள் பள்ளிகளுக்குத் திரும்ப உத்தரவு

மாற்றுப் பணியில் சென்ற ஆசிரியா்கள் பள்ளிகளுக்குத் திரும்ப கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 8:45 pm

மாற்றுப் பணியில் சென்ற ஆசிரியா்கள் பள்ளிகளுக்குத் திரும்ப கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சில இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்களுக்கு கடந்த கல்வியாண்டில் (2025-2026) பல்வேறு காரணங்களின் அடிப்படையில் மாணவா்கள் நலன் கருதி மாற்றுப் பணி மூலம் பணிபுரிய ஆணை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நிகழ் கல்வியாண்டுக்கான இறுதி வேலை நாள் ஏப்ரல் 25-ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது.

எனவே, கடந்த ஆண்டில் மாற்றுப் பணி மூலம் பணிபுரிய ஆணை வழங்கப்பட்ட ஆசிரியா்களை உடனடியாக பணியில் இருந்து விடுவித்து பள்ளி இறுதி வேலை நாளில் அவரவா் பணிபுரிந்த பள்ளிகளில் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகாளை அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளும் உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.