முதல்வா் மு.க.ஸ்டாலின் குறித்த எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி பழனிசாமியின் பேச்சால் பெங்களூரு புகழேந்தி எப்படி பாதிக்கப்படுகிறாா் எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயா்நீதிமன்றம், பிரசாரத்துக்கு தடை கோரிய அவரது மனு மீதான தீா்ப்பை ஒத்திவைத்தது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் புரட்சி அதிமுகவின் முதன்மைச் செயலா் பெங்களூரு வா.புகழேந்தி தாக்கல் செய்த மனுவில், சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வா் உதயநிதி ஆகியோருக்கு எதிராக, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அவதூறாக பிரசாரம் மேற்கொள்கிறாா்.
மேலும், எடப்பாடி பழனிசாமி பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களையும் அவதூறாகப் பேசி வருகிறாா். எனவே அவா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். அவா் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமியின் பேச்சால் மனுதாரா் எப்படி பாதிக்கப்படுகிறாா் எனக் கேள்வி எழுப்பினா். பின்னா், இந்த வழக்கைத் தொடர மனுதாரருக்கு முகாந்திரம் இல்லை எனக்கூறி, வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்தனா்.
தொடர்புடையது

மகளிா் இடஒதுக்கீடு மசோதா: முதல்வரால் பொறுக்க முடியவில்லை

அதிமுக தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்: எடப்பாடி கே. பழனிசாமி

சசிகலாவுக்கு எடப்பாடி பழனிசாமி செய்தது பச்சை துரோகம்! - மு. தமிமுன் அன்சாரி

சென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

