பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

கோவை தெற்கில் தேர்தலை நிறுத்தக்கோரி அதிமுக வேட்பாளர் தர்னா!

கோவை தெற்கில் தேர்தலை நிறுத்தக்கோரி அதிமுக வேட்பாளர் அம்மன் கே. அர்ச்சுணன் தர்னா....

News image

அதிமுக வேட்பாளர் அம்மன் கே. அர்ச்சுணன் தர்னா - X

Updated On :22 ஏப்ரல் 2026, 7:41 am

கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை நிறுத்தக்கோரி அதிமுக வேட்பாளர் அம்மன் கே. அர்ச்சுணன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் தொடர்ந்து பணப்பட்டுவாடா நடைபெறுவதாகவும் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறி அந்த தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் கே. அர்ச்சுணன் குற்றம்சாட்டியுள்ளார்.

பணப்பட்டுவாடா செய்யும் திமுகவினரைப் பிடித்துக்கொடுத்தாலும் பின்னர் அவர்கள் விடுவிக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையமும் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாகவும் கோவை தெற்கில் நடப்பதுபோல எங்குமே இந்தளவுக்கு அட்டூழியங்கள் நடக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து, இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் இந்த தர்னா போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை(ஏப். 23) நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.

கோவை தெற்கில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார்.

Summary

AIADMK Candidate Staged a Dharna Demanding the Stoppage of the Election in Coimbatore South

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.