தமிழகம் முழுவதும் எதிர்பார்க்கும், நிலையான திமுக அரசு அமையும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அவரது சொந்த ஊரான கண்டனூர் சிட்டாள் ஆச்சி அரசு உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் இன்று(வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ப. சிதம்பரம் கூறியதாவது:
தமிழ்நாடு முழுவதும் நிலையான அரசு அமைய வேண்டும். வளர்ச்சி வேண்டும். மக்கள் நலத்திட்டங்கள் வேண்டும் என்கிற மூன்று எதிர்பார்ப்புகள்தான் எதிரொலிக்கின்றன.
இந்த மூன்றையும் நிறைவேற்ற திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான அரசு அமையும். இன்னும் 5 ஆண்டுகள் நிலையான அரசு அமைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் என்றார்.
Summary
DMK govt will form again in Tamil Nadu: P. Chidambaram
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்
தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் தடுப்பு காவல் நிலையங்கள்- முதல்வர் விஜய்
பெரும்பான்மையை பேரவையில்தான் நிரூபிக்க வேண்டும், ஆளுநர் மாளிகை அல்ல! காங்கிரஸ்

4.5.1976: விவசாயிகளிடம் அரசு கடன் வசூல் ஒத்திவைப்பு - த.நா. அரசாங்கம் உத்தரவு
விடியோக்கள்

தவெகவின் பெண் அமைச்சர்கள் பதவியேற்பு! | TVK Ministers | Female ministers

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி! அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு! | TVK Ministers | TVK | Vijay
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |




