அமைச்சராகிறார் ஐயூஎம்எல் ஷாஜகான்! - காதர் மொய்தீன் அறிவிப்புபுதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!அமைச்சர் செங்கோட்டையனின் துறை மாற்றம்!மனம் நொந்து அதிமுகவிலிருந்து விலகிவிட்டேன்: தனபால்!சீமான் - கயல்விழிக்கு பெண் குழந்தை! தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!
/

தமிழகம் முழுவதும் எதிர்பார்க்கும் திமுக அரசு மீண்டும் அமையும்! ப. சிதம்பரம்

சிவகங்கை மாவட்டத்தில் வாக்களித்த பின் ப. சிதம்பரம் பேட்டி...

News image

வாக்களித்த ப. சிதம்பரம் - DIN

Updated On :23 ஏப்ரல் 2026, 10:58 am IST

தமிழகம் முழுவதும் எதிர்பார்க்கும், நிலையான திமுக அரசு அமையும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அவரது சொந்த ஊரான கண்டனூர் சிட்டாள் ஆச்சி அரசு உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் இன்று(வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு வாக்களித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ப. சிதம்பரம் கூறியதாவது:

தமிழ்நாடு முழுவதும் நிலையான அரசு அமைய வேண்டும். வளர்ச்சி வேண்டும். மக்கள் நலத்திட்டங்கள் வேண்டும் என்கிற மூன்று எதிர்பார்ப்புகள்தான் எதிரொலிக்கின்றன.

இந்த மூன்றையும் நிறைவேற்ற திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான அரசு அமையும். இன்னும் 5 ஆண்டுகள் நிலையான அரசு அமைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

Summary

DMK govt will form again in Tamil Nadu: P. Chidambaram

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.