திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகே உள்ள வாக்குச்சாவடியில் யாரும் வாக்களிக்க வராததால், வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது.
நான்குனேரி அருகிலுள்ள பெரும்பாத்து கிராமத்தில் வசித்துவரும் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளதால், வாக்குச்சாவடியில் அதிகாரிகள் மட்டுமே உள்ளனர். வாக்களிக்க ஒருவர் கூட வரவில்லை.
மார்ச் 2-ஆம் தேதி சாதியப் பின்னணி கொண்ட குற்றவாளிகள் நடத்திய அரிவாள் தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அக்கிராமத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இன மக்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.
இக்கிராமத்தில் மொத்தம் 974 வாக்காளர்கள் வசிக்கின்றனர். இதனிடையே தேர்தலையொட்டி கூட, தங்களைச் சந்தித்து எந்தவொரு உயர் அதிகாரியும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பெரும்பாத்து வாக்குச்சாவடியில் ஒருவர் கூட வாக்களிக்க வராததால், வெறிச்சோடி காணப்படுகிறது.
Summary
TN Election 2026 No one turned up to vote polling station near Nanguneri Deserted
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரோடு மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு

அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!

ஈரோடு மாவட்டத்தில் 90% வாக்குகள் பதிவாக வாய்ப்பு: ஆட்சியா்

ஏப். 14 வரை வீடுகளுக்குச் சென்று வாக்குகள் பெறும் பணி
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு


