தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு உயரும் என நம்புகிறேன் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணி 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாக்களித்து தங்கள் ஜனநாயகக் கடமையாற்றி வருகின்றனர்.
அந்தவகையில் தூத்துக்குடி திமுக எம்.பி. கனிமொழி வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களுடன் கனிமொழி பேசியதாவது:
''மக்கள் நல்ல முடிவு எடுப்பார்கள். நான் எண்களுக்குள் போக விரும்பவில்லை. சிறப்பான வெற்றியை திமுக கூட்டணி பெறும். 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வோம்.
வாக்குகளை எண்ணிய பிறகு உண்மையை அனைவரும் தெரிந்துகொள்வார்கள். அதிகமாக மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களிக்க வேண்டும். திமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதே மக்கள் விருப்பம். உங்கள் எதிர்காலத்திற்கு நல்ல ஆட்சியாக இருக்கும் என்பதை சிந்தித்து வாக்களியுங்கள். முதல் தலைமுறை வாக்காளர்கள் எதிர்காலத்தை சிந்தித்து வாக்களிக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.
Summary
TN Election 2026 DMK MP Kanimozhi has stated that she believes voter turnout will increase in Tamil Nadu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழ்நாட்டுக்கும் அதன் நலன்களுக்கு எதிரான சக்திகளுக்கும் இடையே தேர்தல்: கனிமொழி எம்.பி.
பாஜக வாஷிங்மெஷினுக்குள் இபிஎஸ்: கனிமொழி விமர்சனம்

திருப்பரங்குன்றத்தில் பாஜகவின் வகுப்புவாத வன்முறை முயற்சி: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
அதிமுக பெயரில் பாஜக தலைமையிலான கூட்டணி: கனிமொழி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


