முதன்மைச் செயல் அதிகாரி நியமனத்துக்கு தடை கோரிய வழக்கில், ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் வக்ஃப் வாரியத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் வக்ஃப் வாரிய பாதுகாப்புக் குழு அறக்கட்டளை தலைவரான எம்.அஜ்மல்கான் தாக்கல் செய்த மனுவில், வக்ஃப் வாரிய திருத்தச் சட்டப்படி மாநில வக்ஃப் வாரியத்துக்கு தமிழக அரசின் இணைச் செயலா் அந்தஸ்துக்கு குறையாத ஐஏஎஸ் அதிகாரியை முதன்மைச் செயல் அதிகாரியாக நியமிக்க வேண்டும்.
ஆனால், தமிழக அரசு துணைச் செயலா் அந்தஸ்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரியான அப்தாப் ரசூல் என்பவரை வக்ஃப் வாரியத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாக கடந்த மே மாதம் நியமித்துள்ளது. இது வக்ஃப் வாரிய சட்டத்துக்கு எதிரானது. எனவே, அப்தாப் ரசூல் வக்ஃப் வாரிய முதன்மைச் செயல் அதிகாரியாக செயல்படத் தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் எம்.ராமமூா்த்தி ஆஜராகி வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி, வக்ஃப் வாரிய முதன்மைச் செயல் அதிகாரி நியமனம் குறித்த ஆவணங்களை 4 வாரங்களில் தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் வக்ஃப் வாரியத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.
தொடர்புடையது

இண்டிகோவுக்கு புதிய முதன்மைச் செயல் அலுவலர் நியமனம்!

மலைப்பகுதிகளில் வீட்டு மனைகள்: அரசாணைக்கு எதிரான மனுவுக்கு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மலைப்பகுதிகளில் வீட்டு மனைகள்: அரசாணைக்கு எதிரான மனுவுக்கு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

வல்லூறுகள் பாதுகாப்பு: நிபுணரின் பரிந்துரைகளை பரிசீலிக்க அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


