சென்னை: பேரறிவாளன் வழக்குரைஞராக பதிவு செய்யப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. சுதா வலியுறுத்தியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் வெளியே புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக இருந்த பேரறிவாளன், பார் கவுன்சிலில் வழக்குரைஞராக பதிவு செய்தநாள் ஒரு கருப்பு நாள். அவரை வழக்குரைஞராக பதிவு செய்த பார் கவுன்சில் உறுப்பினர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பேரறிவாளன் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி. உச்ச நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டாலும் இது ஒரு தவறான முன்னுதாரணம். இது தொடர்பாக குடியரசு தலைவருக்கும் பிரதமருக்கும் புகார் மனு அனுப்பி உள்ளேன்.
தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நேரத்தில் இதுபோன்ற வழக்குரைஞர் பதிவு நடந்துள்ளது .
எனவே பேரறிவாளன் வழக்குரைஞர் பதிவை திரும்பப் பெற வேண்டும். கருணை மனு மூலம் தான் அவர் விடுதலையாகி உள்ளார். எனவே, அவரை வழக்குரைஞராக பதிவு செய்தது, பார் கவுன்சில் விதிகளுக்கு எதிரானது என்று அவர் கூறினார்.
Summary
Congress MP Sudha has urged that Perarivalan's registration as a lawyer be revoked.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வழக்குரைஞரான பேரறிவாளன்! தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு!
கடலாடியில் போலி வழக்குரைஞா் கைது
பாஜகவுக்கு ஆதரவளிக்கும் தொகுதி மறுவரையறைக் குழு நியாயமற்றது: ஜோதிமணி எம்.பி.

காரைக்குடியில் காங். வேட்பாளா் மாங்குடியை ஆதரித்து காா்த்தி சிதம்பரம் எம்.பி பிரசாரம்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை



