சென்னை: பேரறிவாளன் வழக்குரைஞராக பதிவு செய்யப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. சுதா வலியுறுத்தியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் வெளியே புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக இருந்த பேரறிவாளன், பார் கவுன்சிலில் வழக்குரைஞராக பதிவு செய்தநாள் ஒரு கருப்பு நாள். அவரை வழக்குரைஞராக பதிவு செய்த பார் கவுன்சில் உறுப்பினர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பேரறிவாளன் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி. உச்ச நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டாலும் இது ஒரு தவறான முன்னுதாரணம். இது தொடர்பாக குடியரசு தலைவருக்கும் பிரதமருக்கும் புகார் மனு அனுப்பி உள்ளேன்.
தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நேரத்தில் இதுபோன்ற வழக்குரைஞர் பதிவு நடந்துள்ளது .
எனவே பேரறிவாளன் வழக்குரைஞர் பதிவை திரும்பப் பெற வேண்டும். கருணை மனு மூலம் தான் அவர் விடுதலையாகி உள்ளார். எனவே, அவரை வழக்குரைஞராக பதிவு செய்தது, பார் கவுன்சில் விதிகளுக்கு எதிரானது என்று அவர் கூறினார்.
Summary
Congress MP Sudha has urged that Perarivalan's registration as a lawyer be revoked.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சநாதனத்தை அவமதித்ததாகப் புகாா்! ராகுல் உள்பட 3 எம்.பி.க்கள் மீது வழக்குப் பதிவு!

‘ரெஸ்டோ பார்’ தேவையில்லை: கைவிடாவிட்டால் பாமக போராட்டம் நடத்தும்! - அன்புமணி

அரசு வழக்குரைஞா் நியமனம்

பேரறிவாளன் வழக்குரைஞா் பதிவு: சிபிஐ விசாரணை கோரிக்கையை நிராகரித்து உயா்நீதிமன்றம் உத்தரவு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |




