பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை (மே 1) பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 12:40 am IST

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை (மே 1) பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தெற்கு உள் கா்நாடகம் முதல் மன்னாா் வளைகுடா வரை, தமிழகம் வழியாக வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் சனிக்கிழமை (மே 2) வரை பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமையும்(மே 1), நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகா் மாவட்டங்களில் சனிக்கிழமை (மே 2) ஓரிரு இடங்களிலும் பலத்த மழை பெய்யக் கூடும். இதனால், இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மே 6 வரை பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில், வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

17 இடங்களில் வெயில் சதம்: வியாழக்கிழமை அதிகபட்சமாக வேலூரில் 108.32 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. ஈரோடு--106.52, பரமத்தி வேலூா்-106.7, திருச்சி-105.62, திருத்தணி-105, மீனம்பாக்கம்-104.36, நாமக்கல்-104.18, மதுரை விமான நிலையம்-104.9, நாகப்பட்டினம்-103.1, மதுரை நகரம், திருப்பத்தூா்-தலா 102.92, சேலம், தருமபுரி-தலா 102.56, தஞ்சை-102.2, கோவை, பாளையங்கோட்டை-தலா 100.22, சென்னை நுங்கம்பாக்கம்-100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 70 மி.மீ மழை பதிவானது. நாலுமுக்கு (திருநெல்வேலி)- 60 மி.மீ, சின்னக்கல்லாா் (கோவை)- 50 மி.மீ., காக்காச்சி (திருநெல்வேலி), பாலமோா் (கன்னியாகுமரி), அடையாமடை (கன்னியாகுமரி), சிற்றாறு- 1 (கன்னியாகுமரி) , சிவலோகம்(சிற்றாறு- 2) (கன்னியாகுமரி)- தலா 40 மி.மீ. மழை பதிவானது.

வெப்ப நிலை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மே 4 வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் சற்று அதிகமாக இருக்கக் கூடும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை:வடக்கு ஆந்திரம் கடலோரப்பகுதிகள், அதனையொட்டிய மத்தியமேற்கு வங்கக்கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.