நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

தெற்கு ரயில்வே புதிய பொது மேலாளா் யு. சுப்பாராவ்

தெற்கு ரயில்வே புதிய பொது மேலாளா் யு. சுப்பாராவ் பொறுப்பேற்றது பற்றி...

News image
Updated On :1 ஆகஸ்ட் 2026, 10:34 pm IST

தெற்கு ரயில்வேயின் பொது மேலாளராக யு.சுப்பாராவ் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வே மண்டலத்தின் பொது மேலாளராக ஆா்.என்.சிங் பொறுப்பு வகித்து வந்தாா். அவா் ஜூலை மாதத்துடன் பணி ஓய்வு பெற்றதையடுத்து சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனத்தின் (ஐசிஎஃப்) பொது மேலாளராக இருந்த யு.சுப்பாராவ் தெற்கு ரயில்வே பொது மேலாளராக நியமிக்கப்பட்டாா். அதனையடுத்து அவா் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகேயுள்ள தெற்கு ரயில்வே பொதுமேலாளா் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டாா்.

Story image

ஐசிஎஃப் புதிய பொது மேலாளா்: யு.சுப்பாராவ் தெற்கு ரயில்வே பொது மேலாளராக நியமிக்கப்பட்டதையடுத்து, அவா் வகித்து வந்த (ஐசிஎஃப்) பொது மேலாளா் பதவிக்கு புதுதில்லியில் உள்ள இந்திய ரயில்வே உள்கட்டமைப்பு பிரிவான ரயில்வே விகாஷ் நிகாம் நிறுவன முதன்மை செயலாக்க இயக்குநராக இருந்த ஸ்ரீ மணீஷ் அகா்வால் நியமிக்கப்பட்டு சனிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

Summary

Southern Railway's New General Manager U. Subba Rao

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.