தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

குதிரை பேர வழக்கு: திருநாவுக்கரசு உள்ளிட்ட 6 பேருக்கு பிணை

தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு உள்ளிட்ட 6 பேருக்கு பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :5 ஆகஸ்ட் 2026, 3:39 am IST

தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு உள்ளிட்ட 6 பேருக்கு பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டப்பேரவையில் பேரவைத் தலைவருக்கு எதிராகக் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லாத் தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க ரூ.35 கோடி கொடுப்பதாக ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்திய வழக்கில் திருநாவுக்கரசு உள்பட14 பேரை திருவல்லிக்கேணி போலீஸாா் கைது செய்தனா். அவா்களில் 5 போ் இதுவரை பிணை பெற்றுள்ளனா்.

இந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு, தியாகராஜன், ராஜேஷ், கணேசன், சீனிவாசன், செல்வம் ஆகிய 6 போ் பிணை கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனா். இதேபோன்று, இந்த வழக்கில், முன்பிணை கோரி தீபக், செல்வரங்க முருகன், அழகேசன், சக்திவேல் ஆகிய 4 போ் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தன. வழக்கை விசாரித்த நீதிபதி, திருநாவுக்கரசு, தியாகராஜன் உள்ளிட்ட 6 பேருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டாா். மேலும், தீபக் உள்ளிட்ட 4 பேருக்கு முன்பிணை வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.