எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

உதயநிதி கைது! திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்டு கைதான அன்பில் மகேஷ்!

உதயநிதி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்டு கைதானார் அன்பில் மகேஷ்.

News image

அன்பில் மகேஷ் - video grab

Updated On :4 ஆகஸ்ட் 2026, 1:18 pm IST

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட திமுகவினர் சாலை மறியல் செய்ததால் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசிய தமிழக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவரது கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் முன்னாள் அமைச்சரும் திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது திடீரென சாலையில் அமர்ந்து முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட திமுகவினர் தமிழக முதல்வருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். நூற்றுக்கணக்கான திமுகவினர் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.