சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு! திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது!

நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டது பற்றி...

News image

நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது - Dinamani

Updated On :22 ஜூலை 2026, 12:50 pm IST

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திருச்சியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாகக் தூக்கிச் சென்று காவல்துறையினர் கைது செய்தனர்.

தில்லியில் நீட் தேர்வு முறைகேட்டுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் பரவி வருகின்றது. தமிழ்நாட்டில் சென்னையில் நேற்று போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே மத்திய அரசைக் கண்டித்தும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட அவர்கள், மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Story image

இதனைத் தொடர்ந்து, அங்குப் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்து காவல் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Summary

Protest against NEET - Those who staged a road blockade in Trichy arrested!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.