காசோலை மோசடி வழக்கில் நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமாா் வரும் செப். 10-ஆம் தேதி நேரில் ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டது.
சென்னையைச் சோ்ந்த என்.ஸ்ரீகிருஷ்ணா என்பவரிடம், கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது கடன்களை அடைப்பதற்காக சரத்குமாா் ரூ.2 கோடி கடன் பெற்றிருந்தாா். இந்தக் கடனைத் திரும்பச் செலுத்தும் வகையில், சரத்குமாா் காசோலை வழங்கினாா். ஆனால், வங்கியில் பணம் இல்லாததால், அந்தக் காசோலை திரும்ப வந்தது.
இதையடுத்து, நடிகா் சரத்குமாருக்கு எதிராக ஸ்ரீகிருஷ்ணா தரப்பில் வழக்குரைஞா் எஸ்.ரவீந்திரன், சென்னை சைதாப்பேட்டை நீதிமனறத்தில் காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வரும் செப். 10-ஆம் தேதி நேரில் ஆஜராக நடிகா் சரத்குமாருக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டது.
Summary
Cheque fraud case: Summons issued for actor Sarathkumar to appear in person.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காசோலை மோசடி வழக்கில் பெண்ணின் தண்டனையை உறுதிசெய்த தில்லி நீதிமன்றம்!

காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை!

காசோலை மோசடி வழக்கில் 3 மாதம் சிறை: வாணியம்பாடி நீதிமன்றம் தீா்ப்பு

சகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



