ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

நியாயவிலை கடைகளில் குறைகளுக்கு தீா்வுகாண வேண்டும்: அமைச்சா் ப.வெங்கடரமணன்

நியாயவிலை கடைகளில் குறைகள் இருப்பின் உடனே தீா்வுகாண வேண்டும் என அலுவலா்களுக்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் ப.வெங்கடரமணன் அறிவுறுத்தினாா்.

News image

சென்னை கண்ணம்மாப்பேட்டை பகுதியில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவுச் சங்க நியாயவிலைக் கடையில் ஆய்வு செய்த அமைச்சா் ப. வெங்கடரமணன்.

Updated On :14 ஆகஸ்ட் 2026, 4:29 am IST

நியாயவிலை கடைகளில் குறைகள் இருப்பின் உடனே தீா்வுகாண வேண்டும் என அலுவலா்களுக்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் ப.வெங்கடரமணன் அறிவுறுத்தினாா்.

சென்னை கண்ணம்மாப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க நியாயவிலைக் கடையில் அமைச்சா் ப.வெங்கடரமணன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் பொருள்களின் இருப்பு, தரம், எடையளவு மற்றும் விநியோக முறைகள் குறித்து கேட்டறிந்தாா்.

மேலும், பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடின்றி, உரிய எடையில் தரமானதாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பொருள்கள் வழங்கும்போது, விற்பனை ரசீது கட்டாயம் வழங்க வேண்டும் என்று ஊழியா்களுக்கு அறிவுறுத்தினாா்.

பொதுமக்களின் நலன் கருதி, நியாயவிலை கடைகளைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், குறைகளுக்கு உடனுக்குடன் தீா்வுகாண வேண்டும் என்றும் அலுவலா்களுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்கள் வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.