தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படைதில்லி செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு அல்-கொய்தாவே காரணம்: ஐ.நா.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடுஅதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

தமிழக - கேரள எல்லையில் ரயில் மோதி குட்டியுடன் தாய் யானை பலி! யானைகள் தினத்தில் சோகம்!

மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி தாய் யானை மற்றும் குட்டி யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.

News image

ரயில் மோதி பலியான யானைகளின் உடல்களை மீட்கும் பணியில் வனத்துறை அதிகாரிகள்.

Updated On :13 ஆகஸ்ட் 2026, 10:02 am IST

உலக யானைகள் தினத்தன்று தமிழக-கேரள எல்லைப் பகுதியில் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி தாய் யானை மற்றும் குட்டி யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.

கோவை மாவட்டம், தமிழக - கேரள எல்லையை ஒட்டியுள்ள கேரளத்தின் பாலக்காடு மாவட்டம் வாளையார் சாவடிப்பாரா புதுப்பதி வனப்பகுதியில் நள்ளிரவு 11.45 மணியளவில் 4 யானைகள் கொண்ட கூட்டம் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றது. அப்போது அவ்வழியாக வந்த மங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் யானைகள் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் சிக்கிய தாய் யானை மற்றும் குட்டி யானை ஆகிய இரண்டும் ரயில் என்ஜின் சக்கரங்களில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகின.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாளையார் வனத்துறையினர் மற்றும் பாலக்காடு ரயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அதிகாலை 4 மணியளவில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் யானைகளின் உடல்கள் தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்டு, பழுதான ரயில் என்ஜின் சரிசெய்யப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது.

விபத்து நிகழ்ந்த இடம் தமிழக எல்லையிலிருந்து சுமார் 300 முதல் 400 மீட்டர் தொலைவில் கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. மதுக்கரை வனச்சரகத்தின் 'பி' டிராக்கைக் கடந்து பாலத்தின் வழியே வளைவான பாதையில் ரயில் வந்ததால், லோகோ பைலட்டால் யானைகளை முன்கூட்டியே பார்த்து ரயிலைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதே விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

அதிவேகமாக ரயில் இயக்கப்பட்டதா? என்பது குறித்தும் வனத்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக வனப்பகுதியில் மதுக்கரை எல்லைக்கு உட்பட்ட இரண்டு ரயில் தடங்களிலும் ரூ.16 கோடி செலவில் செய்யறிவு (ஏஐ) கேமராக்கள், ட்ரோன்கள் மூலம் யானைகள் நடமாட்டம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டு வருகின்றன. ஆனால், எல்லை தாண்டிய கேரளப் பகுதியில் இத்தகைய ஏ.ஐ கேமரா கண்காணிப்பு இல்லாதது குறித்து வன ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கடந்த 2021-ஆம் ஆண்டிலும் இதே மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி, தற்போது விபத்து நடந்த இடத்திற்கு அருகே கருவுற்ற பெண் யானை உள்பட 3 யானைகள் உயிரிழந்தன. இந்த விபத்தின் காரணமாக தமிழகம் - கேரளம் இடையேயான முக்கிய ரயில் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டது. 'பி' டிராக்கில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, அவ்வழியாக வந்த ரயில்கள் 'ஏ' டிராக் வழியாக மாற்றி இயக்கப்பட்டன.

உலக யானைகள் தினத்தன்று தாய் மற்றும் குட்டி யானை ரயில் மோதி பலியான சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Summary

On World Elephant Day, a mother elephant and her calf tragically died on the spot after being struck by the Mangalore Express train along the Tamil Nadu-Kerala border.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.