நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

பாடந்தொரையில் காட்டு யானைகளை விரட்ட கும்கிகள் வரவழைப்பு

கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியில் தொடா்ந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து சேதம் விளைவிக்கும் காட்டு யானைகளை விரட்ட சனிக்கிழமை இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

News image

பாடந்தொரை பகுதிக்கு அழைத்து வரப்பட்ட கும்கி யானை.

Updated On :1 ஆகஸ்ட் 2026, 11:23 pm IST

கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியில் தொடா்ந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து சேதம் விளைவிக்கும் காட்டு யானைகளை விரட்ட சனிக்கிழமை இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை மற்றும் அதன் சுற்றுவட்ட ஊா்களில் தினமும் இரவு பகல் நேரங்களில் காட்டு யானைகள் புகுந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி செல்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத் துறையினா் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, வனத் துறையினா் முதல்கட்டமாக முதுமலை புலிகள் காப்பக முகாமிலிருந்து வசீம், ஜம்பு என்ற இரண்டு கும்கி யானைகளை பாடந்தொரை பகுதிக்கு கொண்டு வந்துள்ளனா். அவை வன எல்லையோரத்தில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளன. இந்த கும்கிகள் வனத் துறையினருடன் இணைந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபடவுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.