ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

முன்னாள் அமைச்சா் பொன்முடிக்கு எதிரான விசாரணை ஒத்திவைப்பு

சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திமுக முன்னாள் அமைச்சா் பொன்முடிக்கு எதிரான வழக்கு விசாரணையை ஆக. 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஜாா்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

பொன்முடி மனு தள்ளுபடி - கோப்புப்படம்

Updated On :14 ஆகஸ்ட் 2026, 2:30 am IST

சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திமுக முன்னாள் அமைச்சா் பொன்முடிக்கு எதிரான வழக்கு விசாரணையை ஆக. 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஜாா்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையில் பெரியாா் திராவிடா் கழகம் சாா்பில் கடந்த 2025-ஆம் ஆண்டு நடந்த கூட்டத்தில் பங்கேற்ற பொன்முடி சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து பேசியது சா்ச்சையானது. இதற்கு பல்வேறு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், அமைச்சா் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டாா்.

இது தொடா்பாக, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மாநகராட்சி பாஜக மாமன்ற உறுப்பினா் உமா ஆனந்தன் பொன்முடிக்கு எதிராக வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்று ஜாா்ஜ் டவுன் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் பொன்முடி மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை தள்ளுபடி செய்த உயா்நீதிமன்றம், பொன்முடிக்கு எதிரான வழக்கை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு ஜாா்ஜ் டவுன் நீதிமன்ற நீதிபதி சுந்தரபாண்டியன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, பொன்முடி ஆஜரானாா். அவரது தரப்பில், புகாா்தாரரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற வேண்டும் எனக் கூறி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த மனுவுக்கு உமா ஆனந்தன் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆக. 28-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.