வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 2,120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வார விடுமுறை நாள்களை முன்னிட்டு, சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் பிற இடங்களிலிருந்தும் தினமும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஆக. 14) 505 பேருந்துகள், சனிக்கிழமை (ஆக. 15) 570 பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோல, சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஆக. 14) 110 பேருந்துகள், சனிக்கிழமை (ஆக. 15) 110 பேருந்துகள், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு, கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், மாதவரத்திலிருந்து வெள்ளி, சனி (ஆக. 14, 15) ஆகிய நாள்களில் 80 சிறப்பு பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஞாயிற்றுக்கிழமை (ஆக. 16) சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 465 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 2,120 சிறப்பு பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆடிப் பெருக்கு: 2,075 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதி விடுமுறை: 1,635 பேருந்துகள் இயக்கம்

வார விடுமுறை: 1,635 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார விடுமுறை: 1,475 சிறப்பு பேருந்துகள்
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day



