வார இறுதி விடுமுறையையொட்டி, 1,635 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வார இறுதி விடுமுறை நாள்களையொட்டி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 24) 395 பேருந்துகளும், சனிக்கிழமை (ஜூலை 25) 330 பேருந்துகளும், சென்னை கோயம்பேட்டிலிருந்து வெள்ளி, சனிக்கிழமைகளில் தலா 120 பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு, கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து வெள்ளி, சனிக்கிழமை 25 பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தவிர, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 420 பேருந்துகள் என மொத்தம் 1,635 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









