கோவையைத் தொடர்ந்து சென்னையிலும் போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக் கேட்ட மாணவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி உதயநிதி தனது எக்ஸ் பக்கத்தில்,
"சென்னை திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக் கேட்டதால், அரசுப் பள்ளியில் +2 படித்து வந்த மாணவர் தனுஷ், 30 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.
கோவையில் போதை கும்பலை தட்டிக் கேட்டதற்காக கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட, அடுத்த சில தினங்களில் சென்னையிலும் இத்தகைய கொடூரம் நடந்திருக்கிறது.
சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதில் இந்த அரசு எந்த அளவுக்கு தோற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கு தமிழ்நாட்டிலே தொடரும் கொலைகளே சாட்சி.
போதைப் பொருள் பயன்படுத்துவதையோ – விற்பதையோ அம்பலப்படுத்தினால், அவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்பது, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் விடப்படும் எச்சரிக்கை.
நிர்வாகத்திறனற்ற இந்த கோமாளி சர்க்காரை கண்டு சமூக விரோதிகளுக்குத் துளியும் பயமில்லை என்பதே இதற்கு காரணம்.
குறிப்பாக, பள்ளிகளில் – கல்லூரிகளில் இத்தகைய சம்பவங்கள் நடப்பதை அரசு கண்டும் காணாமல் வாயை மூடிக் கொண்டு இருப்பது வெட்கக்கேடு.
மாணவர் தனுஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்.
இத்தகைய தொடர் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் பயன்பாடு இருக்கிறதா? அதற்கு என்ன காரணம்?
இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் உரிய முறையில் விசாரித்து இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், வன்முறை எதற்கும் தீர்வல்ல என்பதை உணர்த்தும் வகையில் மாணவர்கள் மத்தியில் கவுன்சிலிங் வழங்கி போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
à®à¯à®©à¯à®©à¯ திரà¯à®µà¯à®±à¯à®±à®¿à®¯à¯à®°à®¿à®²à¯ பà¯à®¤à¯à®ªà¯à®ªà¯à®°à¯à®³à¯ பà¯à®´à®à¯à®à®¤à¯à®¤à¯à®¤à¯ தà®à¯à®à®¿à®à¯à®à¯à®à¯à®à®¤à®¾à®²à¯, à®à®°à®à¯à®ªà¯à®ªà®³à¯à®³à®¿à®¯à®¿à®²à¯ +2 பà®à®¿à®¤à¯à®¤à¯ வநà¯à®¤ மாணவர௠தனà¯à®·à¯, 30 பà¯à®°à¯ à®à¯à®£à¯à® à®à¯à®®à¯à®ªà®²à®¾à®²à¯ à®à®à®¿à®¤à¯à®¤à¯à®à¯ à®à¯à®²à¯ à®à¯à®¯à¯à®¯à®ªà¯à®ªà®à¯à®à¯à®³à¯à®³ à®à®®à¯à®ªà®µà®®à¯ à®à®¤à®¿à®°à¯à®à¯à®à®¿ à®à®³à®¿à®à¯à®à®¿à®±à®¤à¯.
— Udhay (@Udhaystalin) August 15, 2026
à®à¯à®µà¯à®¯à®¿à®²à¯ பà¯à®¤à¯ à®à¯à®®à¯à®ªà®²à¯ தà®à¯à®à®¿à®à¯ à®à¯à®à¯à®à®¤à®±à¯à®à®¾à® à®à®²à¯à®²à¯à®°à®¿ மாணவர௠à®à®®à¯à®¤à®©à¯ à®à¯à®²à¯â¦
Summary
TVK govt remains silent on Incidents in schools and colleges: Udhayanidhi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல்
உருப்படியாக எதுவுமில்லை! வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த உதயநிதி!

உதயநிதி ஸ்டாலின் கைது! பரபரப்பான நிமிடங்கள்! | TVK | DMK

தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்
விடியோக்கள்

சுதந்திர நாள் விழா! முதல்வர் விஜய்யின் முக்கிய அறிவிப்புகள்! | CM Vijay | TVK




