இடதுசாரி கட்சிகளின் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிய உத்தரவை தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்ககம் திரும்பப் பெற்றது.
நீட் தேர்வு ரத்து, தேர்வு முறைகேடு, பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில் மாணவர்கள் சார்ந்த பிரச்னைகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து அக்கட்சிகளின் எஸ்.எஃப்.ஐ. மற்றும் ஏ.ஐ.எஸ்.எஃப். மாணவர் அமைப்பினர் போராடுவது வழக்கம்.
சமீபத்தில் தில்லியில் மத்திய அரசுக்கு எதிராக நடைபெற்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டத்துக்கு ஆதரவாக சென்னையிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் சிஜேபி போராட்டங்களில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசு கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரிக் கல்வி இயக்ககம் அனுப்பிய சுற்றறிக்கை சமூக ஊடகங்களில் வெளியானது.
அதில், ”இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் பள்ளிக் கல்வி, உயர் கல்வி, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளிடையே துறை இடைத்தொடர்பு மற்றும் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நடவடிக்கையை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் நாளை போராட்டம் நடத்தப் போவதாக இந்திய மாணவர் சங்கம் அறிவித்த நிலையில், அந்த அலுவலகக் கடிதத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதாக கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முன்னதாக, நேற்று திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இடதுசாரிகள் உறுப்பினர்கள் குறித்த தகவல்களை திரட்ட வட்டாட்சியர் உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
Ban on students participating in Left-wing protests withdrawn!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை! தமிழக கல்வித் துறை

டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!

ஜார்க்கண்டில் 20-வது நாளாக மாணவர்கள் போராட்டம்! 600 பேர் மீது வழக்குப் பதிவு!

பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம்
விடியோக்கள்

Perumal mani interview | விஜய் அரசின் தனித்தீர்மானங்களால் என்ன பயன் ? | CM Vijay | TVK | TN Assembly



