பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுவது பற்றி....

Onam Festival: Sabarimala Ayyappa Temple opens today

சபரிமலை - கோப்புப் படம்

Published On :24 ஆகஸ்ட் 2026, 10:26 am IST

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.

மாலை 5 மணிக்கு கோயில் தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து தீபம் ஏற்றுகிறார். தொடர்ந்து பதினெட்டாம் படிக்குக் கீழே உள்ள ஆழியில் தீ மூட்டப்படும். உத்திராட நாளான நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 5 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம் ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர் ஓணம் பண்டிகை நாளான ஆக. 26ஆம் தேதி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் ஓண விருந்து அளிக்கப்பட உள்ளது. ஓணம் பூஜைகள் நிறைவுற்று ஆகஸ்ட் 28-ஆம் தேதி இரவு 10 மணிக்குக் கோயில் நடை அடைக்கப்படும்.

ஓணம் பண்டிகைக் காலகூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு பக்தர்களுக்காகச் சன்னிதானத்தில் சிறப்பு வசதிகளை தேவஸ்வம் போர்டு செய்துள்ளது.

Summary

Sabarimala temple will open on Monday evening for Onam pujas.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.