
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆக. 24) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
சென்னை உயர்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை(ஆக. 24) விசாரணைக்கு வரும் வழக்குகள் குறித்து....

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஆக. 24) எந்தெந்த வழக்குகள் விசாரணை? - கோப்புப்படம்
தமிழ்நாட்டில் காலியானதாக அறிவிக்கப்பட்ட 6 பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக் கோரிய வழக்கு, முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணிக்கு எதிரான ஒப்பந்தப்புள்ளி ஊழல் முறைகேடு தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 24) விசாரணைக்கு வருகின்றன.
1. காலியானதாக அறிவிக்கப்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக் கோரிய வழக்கு விசாரணைக்கு வருகின்றன.
2. தமிழகம் முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும் உள்ள கழிவறை வசதிகளை ஆய்வு செய்து தூய்மையாக பராமரிக்க ஓய்வு பெற்ற நீதிபதியின் கீழ் குழு அமைக்க உத்தரவிடக்கோரி வழக்கு
3. தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் எப்ஐஆரை 24 மணி நேரத்தில் காவல்துறை இணையதளத்தில் வெளியிட உத்தரவிடக் கோரிய வழக்கு
4. முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணிக்கு எதிரான ஒப்பந்தப்புள்ளி ஊழல் முறைகேடு தொடர்பாக அறப்போர் இயக்கம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
5. அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்று பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி வழக்கு இன்று விசாரணை செய்யப்பட உள்ளது.
Summary
Which cases are up for hearing at the Madras High Court today
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





