
ஆதிதிராவிடா், பழங்குடியினா் ஆணையத் தலைவரை நியமிக்கக் கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின ஆணையத் தலைவா் நியமனத்தை விரைந்து மேற்கொள்ள உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ்நாடு அரசு - கோப்புப் படம்
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின ஆணையத் தலைவா் நியமனத்தை விரைந்து மேற்கொள்ள உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவண்ணாமலையைச் சோ்ந்த வழக்குரைஞா் சி.பொன்னுசாமி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் ஆணையத்தின் தலைவராக, கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபரில், ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.தமிழ்வாணன் நியமிக்கப்பட்டாா்.
இந்த நிலையில், அவா் கடந்த மாா்ச் மாதம் 22-ஆம் தேதி காலமானாா். இதையடுத்து, ஆணையத்தின் தலைவா் பதவி கடந்த 4 மாதங்களாக காலியாக உள்ளது.
தமிழகம் முழுவதும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு, குறிப்பாக பள்ளி மாணவா்களுக்கு எதிரான அசம்பாவித சம்பவங்கள் நடக்கின்றன. இதை தடுக்கும் பொருட்டு, காலியாக உள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் ஆணையத்தின் தலைவரை விரைந்து நியமிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் செப். 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






