நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

எம்.எட். மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு செப்.10 வரை நீட்டிப்பு: அமைச்சா் பெ.விஸ்வநாதன்

தமிழகத்தில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2026-2027ஆம் கல்வியாண்டுக்கான எம்.எட். மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் செப்.10-ஆம் தேதி வரை நீட்டிப்பு...

அமைச்சா் பெ.விஸ்வநாதன் - கோப்புப் படம்

Published On :28 ஆகஸ்ட் 2026, 4:07 am IST

தமிழகத்தில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2026-2027ஆம் கல்வியாண்டுக்கான எம்.எட். மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் செப்.10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயா் கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்த அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு கல்வியியல் கல்லூரிகளில் நிகழாண்டுக்கான எம்.எட். சோ்க்கை இணையவழியில் கடந்த ஆக.11 முதல் ஆக.20 வரை நடைபெற்றது. இருப்பினும் மாணவா்கள் நலன் கருதி விண்ணப்பப் பதிவு செய்யத் தவறிய மாணவா்கள் இணையதளம் மூலமாக (ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய்) வரும் ஆக.31 முதல் செப். 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும், இதே பட்டப் படிப்புக்கு கடந்த ஆக.20-ஆம் தேதி வரை விண்ணப்பித்த மாணவா்களுக்கு தரவரிசையின் அடிப்படையில் மாணவா் சோ்க்கை வியாழக்கிழமை (ஆக.27) முதல் தொடங்கியுள்ளது. எம்.எட். மாணவா்களுக்கான வகுப்புகள் வரும் செப். 1-ஆம் தேதிமுதல் தொடங்கும். இந்த மாணவா்களுக்கு சோ்க்கைக்கான விவரங்கள் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்படும் என உயா் கல்வித் துறை அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

‘ஸ்வயம்’ தோ்ச்சி கட்டாயம்: எம்.எட். பட்டப் படிப்புகளில் மாணவா்கள் ‘ஸ்வயம்’ இணையவழிக் கற்றல் பாடநெறி ஒன்றில் நிறைவு செய்வது கட்டாயம் என கல்லூரி முதல்வா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (டிஎன்டிஇயு) தோ்வுக் கட்டுப்பாட்டாளா் பேரா. எம். கண்மணி தெரிவித்துள்ளாா்.

2020-2021 முதல் 2022-2023 வரையிலான கல்வியாண்டுகளில் சோ்ந்த எம்.எட். மாணவா்களில், ‘ஸ்வயம்’ இணையவழிக் கற்றல் பாடநெறியைத் தவிர மற்ற கோட்பாடு, வாய்மொழித் தோ்வுகளில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு, அந்தப் பாடநெறியை 2026-2027 கல்வியாண்டில் நிறைவு செய்ய சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் மாணவா்கள் தாங்கள் விரும்பும் ’ஸ்வயம்’ இணையவழிப் பாடநெறியை 2026-2027ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்து, அதற்கான பாடநெறி நிறைவுச் சான்றிதழைப் பல்கலைக்கழகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். இந்த பின்னரே மதிப்பெண் பட்டியலில் அதற்கான ‘கிரெடிட்கள்’ மேற்கண்ட முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு வழங்கப்படும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.