
முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடு குறைப்பு
முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது குறித்து...
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்
முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டிருந்த இசட் பிரிவு பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், தவெக ஆட்சி மாறியதும் இசட் பிரிவு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டிருந்த இசட் பிரிவு பாதுகாப்பு, இன்றுமுதல் எஸ்கார்ட் பாதுகாப்பாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமிக்கும் இதே எஸ்கார்ட் பாதுகாப்புதான் வழங்கப்பட்டிருக்கிறது.
இசட் பிளஸ் பிரிவில் ஒரு நாளில் சுழற்சி முறையில் 58 காவலர்களும், இசட் பிரிவில் 33 காவலர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
ஆனால், எஸ்கார்ட் பாதுகாப்பில் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 4 காவலர்கள் மட்டுமே இருப்பர்.
Summary
Reduction in security arrangements provided to former CM M.K. Stalin
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




