காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

சென்னை - புது தில்லி விரைவு ரயில்கள் அக். 13 வரை ஃபரிதாபாத்தில் நிற்காது!

சென்னை - புது தில்லி விரைவு ரயில் உள்ளிட்ட 4 விரைவு ரயில்கள் வரும் அக். 13 வரை ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாத் நிலையத்தில் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:26 am IST

சென்னை - புது தில்லி விரைவு ரயில் உள்ளிட்ட 4 விரைவு ரயில்கள் வரும் அக். 13 வரை ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாத் நிலையத்தில் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாத் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து வரும் அக். 13-ஆம் தேதி வரை சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து தினமும் மாலை 6.15 மணிக்குப் புறப்பட்டு புது தில்லி செல்லும் கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் (எண்: 12615) ஃபரிதாபாத் நிலையத்தில் நிற்காது. அதேபோல, திருவனந்தபுரத்தில் இருந்து புது தில்லி செல்லும் கேரள அதிவிரைவு ரயில் (எண்: 12625) வரும் அக். 13-ஆம் தேதி வரை ஃபரிதாபாத் நிலையத்தில் நிற்காது.

ஸ்ரீ மாதா வைஷ்ணவ் தேவி கட்ரா நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் நிலையம் வரும் அந்தமான் விரைவு ரயில் (எண்: 16032) வரும் அக். 14-ஆம் தேதி வரையிலும், ஸ்ரீ வைஷ்ணவ் கட்ரா நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ஹிம்சாகா் விரைவு ரயில் (எண்: 16318) வரும் அக். 14 ஆம் தேதி வரையிலும் ஃபரிதாபாத் நிலையத்தில் நிற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.