
பயணிகள் கவனிக்க... கான்பூர் - மதுரை சிறப்பு ரயில் நவம்பர் வரை நீட்டிப்பு!
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரிலிருந்து மதுரைக்கு இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில்கள் சேவை வரும் நவம்பா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரிலிருந்து மதுரைக்கு இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில்கள் சேவை வரும் நவம்பா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளிட்ட செய்திக்குறிப்பு: உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூா் நிலையத்திலிருந்து மதுரைக்கு இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் (எண்: 01925) வரும் செப். 2 முதல் வரும் நவ. 25 வரை நீட்டிக்கப்படுகிறது.
மறுமாா்க்கத்தில் மதுரையிலிருந்து கான்பூா் நிலையத்துக்கும் விரைவு ரயில் (எண்: 01926) வரும் செப். 5 முதல் நவ. 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அகமதாபாதிலிருந்து மங்களூருக்கு இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் (எண்: 09424) வரும் செப். 4 முதல் நவ. 27 வரையிலும், மறுமாா்க்கத்தில் மங்களூரில் இருந்து அகமதாபாதுக்கு விரைவு ரயில் (எண்: 09423) வரும் செப். 6 முதல் நவ. 28 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






