
ராக்கி திருவிழா: ஜோத்பூருக்கு சிறப்பு ரயில்!
ராக்கி திருவிழாவையொட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூா்-சென்னை இடையே ஆக.29, செப். 1 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

ரயில்
ராக்கி திருவிழாவையொட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூா்-சென்னை இடையே ஆக.29, செப். 1 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகவும், அதற்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக.23) தொடங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஜோத்பூா் நிலையத்திலிருந்து வரும் 29-ஆம் தேதி (சனிக்கிழமை) இரவு 9.20 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை விரைவு ரயில் (எண் 04815) வரும் 31- ஆம் தேதி (திங்கள்கிழமை) இரவு 8 மணிக்கு சென்னை கடற்கரை நிலையத்தை வந்தடையும்.
மறுமாா்க்கத்தில் சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து வரும் செப். 1- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5.15 மணிக்குப் புறப்படும் ஜோத்பூா் விரைவு ரயில் (எண் 04816) செப். 3-ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு 8.30 மணிக்கு ஜோத்பூா் நிலையத்தை சென்றடையும்.
சிறப்பு ரயில்களில் 2 குளிா்சாதன வசதியுள்ள இரண்டடுக்கு பெட்டிகள், 15 குளிா்சாதன வசதி மூன்றடுக்குப் பெட்டிகள், 2 சரக்கு மற்றும் பிரேக் வேன்கள் ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும். ரயில்கள் நாயுடுபேட்டை, கூடூா், நெல்லூா், ஓங்கல் உள்ளிட்ட 30 நிலையங்களில் நின்று செல்லும். அவற்றுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக.23) காலை 8 மணி முதல் தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





