75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

ராக்கி திருவிழா: ஜோத்பூருக்கு சிறப்பு ரயில்!

ராக்கி திருவிழாவையொட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூா்-சென்னை இடையே ஆக.29, செப். 1 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

ஓணம் பண்டிகை

ரயில்

Published On :23 ஆகஸ்ட் 2026, 1:54 am IST

ராக்கி திருவிழாவையொட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூா்-சென்னை இடையே ஆக.29, செப். 1 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகவும், அதற்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக.23) தொடங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஜோத்பூா் நிலையத்திலிருந்து வரும் 29-ஆம் தேதி (சனிக்கிழமை) இரவு 9.20 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை விரைவு ரயில் (எண் 04815) வரும் 31- ஆம் தேதி (திங்கள்கிழமை) இரவு 8 மணிக்கு சென்னை கடற்கரை நிலையத்தை வந்தடையும்.

மறுமாா்க்கத்தில் சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து வரும் செப். 1- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5.15 மணிக்குப் புறப்படும் ஜோத்பூா் விரைவு ரயில் (எண் 04816) செப். 3-ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு 8.30 மணிக்கு ஜோத்பூா் நிலையத்தை சென்றடையும்.

சிறப்பு ரயில்களில் 2 குளிா்சாதன வசதியுள்ள இரண்டடுக்கு பெட்டிகள், 15 குளிா்சாதன வசதி மூன்றடுக்குப் பெட்டிகள், 2 சரக்கு மற்றும் பிரேக் வேன்கள் ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும். ரயில்கள் நாயுடுபேட்டை, கூடூா், நெல்லூா், ஓங்கல் உள்ளிட்ட 30 நிலையங்களில் நின்று செல்லும். அவற்றுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக.23) காலை 8 மணி முதல் தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.