திண்டுக்கல்: வேன் மோதி 4 சிறார்கள் பலி!
திண்டுக்கல்லில் நிகழ்ந்த விபத்தில் 4 சிறார்கள் பலியானது பற்றி....
பிரதிப் படம்
திண்டுக்கல்லில் வேன் மோதியதில் 4 சிறார்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே கொல்லம்பட்டி பகுதியில் சாலையோரத்தில் ஞாயிற்றுக்கிழமை விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மீது வேன் மோதியது.
இந்த சம்பவத்தில் 3 சிறுமிகள் உள்பட 4 சிறார்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்தைத் தொடர்ந்து வேன் சம்பவ இடத்தில் இருந்து நிற்காமல் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆடு மேய்த்த தம்பதியின் உறவினர்களின் குழந்தைகள் சாலையோரத்தில் விளையாடியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
Summary
The death of four minors in a van accident in Dindigul has caused widespread grief.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







