
கொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? டிடிவி தினகரன் கேள்வி!
தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்து டிடிவி தினகரன் எழுப்பியுள்ள கேள்விகள்...

டிடிவி தினகரன் - முதல்வர் விஜய் - கோப்புப்படம்
தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்னையைச் சுட்டிக்காட்டி தவெக அரசை அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
சென்னை பல்லாவரத்தில் விசிக நிர்வாகி, நெல்லையில் இளைஞர், சேலத்தில் பெண், சேலத்தில் மூதாட்டி என அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நிலவும் கொலைச் சம்பவங்கள் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.
இந்த நிலையில், சட்டம் - ஒழுங்கு பிரச்னையை கண்டித்து டிடிவி தினகரன் சமூக ஊடகத்தில்ல் பதிவிட்டிருப்பதாவது:
“கொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? – சட்டம், ஒழுங்கைக் காப்பாற்ற முடியாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கிறதா தவெக அரசு?
பல்லாவரத்தில் விசிக நிர்வாகி வெட்டிக்கொலை, கூடங்குளம் அருகே ரவுடி தலை துண்டித்துக் கொலை, நெல்லை அருகே இளைஞர் படுகொலை, சேலம் அருகே பெண் துண்டு துண்டாக வெட்டிக்கொலை, கள்ளக்குறிச்சியில் தன் வயலுக்கு இரவு காவலுக்குச் சென்ற மூதாட்டி கொலை என, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து அரங்கேறியிருக்கும் படுகொலைச் சம்பவங்கள் சட்டம் ஒழுங்கை கேள்விகுரியாக்கியுள்ளதோடு, பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.
மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதே அரசு நிர்வாகத்தின் அடிப்படைக் கடமை என்பதை மறந்து, ஆட்சிக்கு வந்து நூறு நாட்களைக் கடந்த நிலையில் இன்னும் கும்பகர்ணத் தூக்கத்திலேயே இருக்கும் தவெக அரசால், பொதுமக்கள் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாடவே அச்சப்படும் அவலநிலை உருவாகியுள்ளது.
தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி, சட்டம் – ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய முதலமைச்சர் ஜோசப் விஜய், சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு உரிய பதிலளிக்காமல் வேண்டுமென்றே சர்ச்சைகளை உருவாக்கி, அவையின் நேரத்தை வீணடிப்பதிலுமே கவனம் செலுத்தி வருவது வெட்கக்கேடானது.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அஞ்சி, தன் வசம் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மானியக் கோரிக்கைகளைக்கூட மற்ற அமைச்சர்களைத் தாக்கல் செய்யச் சொன்ன முதலமைச்சர் ஜோசப் விஜய், தற்போது சீரழிந்திருக்கும் சட்டம் – ஒழுங்கு குறித்து எந்தவிதக் கவலையும் இல்லாமல் இருப்பதைப் பார்க்கும்போது, காவல்துறையையும் மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது.
எனவே, கொலைச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து, சட்டப்படி கடுமையான தண்டனை பெற்றுத்தருவதோடு, தமிழகத்தில் அதலபாதாளத்திற்குச் சென்றிருக்கும் சட்டம் – ஒழுங்கு நிலை குறித்து கூடுதல் கவனம் செலுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
à®à¯à®²à¯à®à¯à®à®³à®®à®¾à® மாறà¯à®à®¿à®±à®¤à®¾ தமிழà¯à®¨à®¾à®à¯? â à®à®à¯à®à®®à¯, à®à®´à¯à®à¯à®à¯à®à¯ à®à®¾à®ªà¯à®ªà®¾à®±à¯à®± à®®à¯à®à®¿à®¯à®¾à®®à®²à¯ à®à¯à®à®à¯à®à®¿ வà¯à®à®¿à®à¯à®à¯ பாரà¯à®à¯à®à®¿à®±à®¤à®¾ தவà¯à® à®à®°à®à¯?
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 31, 2026
பலà¯à®²à®¾à®µà®°à®¤à¯à®¤à®¿à®²à¯ விà®à®¿à® நிரà¯à®µà®¾à®à®¿ வà¯à®à¯à®à®¿à®à¯à®à¯à®²à¯, à®à¯à®à®à¯à®à¯à®³à®®à¯ à®à®°à¯à®à¯ ரவà¯à®à®¿ தல௠தà¯à®£à¯à®à®¿à®¤à¯à®¤à¯à®à¯ à®à¯à®²à¯, நà¯à®²à¯à®²à¯ à®à®°à¯à®à¯ à®à®³à¯à®à®°à¯ பà®à¯à®à¯à®²à¯, à®à¯à®²à®®à¯ à®à®°à¯à®à¯ பà¯à®£à¯ தà¯à®£à¯à®à¯ தà¯à®£à¯à®à®¾à® வà¯à®à¯à®à®¿à®à¯à®à¯à®²à¯,â¦
Summary
Is Tamil Nadu turning into a killing field? TTV Dhinakaran criticizes!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






