காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

ஸ்டாலின் ஆட்சியே அவுட் ஆஃப் கண்ட்ரோல்தான்! விஜய்

திமுக ஆட்சியை விஜய் கடுமையாக விமர்சித்திருப்பது பற்றி...

News image

விஜய் - Photo: TVK

Updated On :13 பிப்ரவரி 2026, 1:27 pm IST

தமிழக சட்டம் - ஒழுங்கு பிரச்னை, அரசு ஊழியர்கள், மக்கள் போராட்டங்கள் குறித்து தமிழக அரசை தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சேலத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார்.

தமிழக சட்டம் - ஒழுங்கு பிரச்னை, அரசு ஊழியர்கள், மக்களின் போராட்டம் குறித்து விஜய் பேசியதாவது:

தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் என்று ஸ்டாலின் அடிக்கடி சொல்வார். அவர் எதிலெல்லாம் அவுட் ஆஃப் கண்ட்ரோல் என்று நான் கூறுகிறேன். சட்டம் - ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, இளைஞர்கள் வேலைவாய்ப்பு என அவரது ஆட்சியே அவுட் ஆஃப் கண்ட்ரோல்தான்.

இந்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் என்று கூறினார். மக்கள் உண்மையாக சந்தோசமாக இருக்கிறார்கள் என்றால், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டங்கள் எல்லாம் ஏன் நடக்கிறது?

எனக்கு தெரிந்து மக்கள் சந்தோசமாக இருந்தால் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள். ஆனால், உங்கள் ஆட்சியில் போராட்டம் நடத்தி கொண்டாடுகிறார்கள்.

மக்களுக்கான அடிப்படை வசதிகள் இல்லை. ஆட்சிக்கு வரும்போது பொய் கூறினீர்கள். இப்போது போகும்போதும் பொய் கூறுகிறீர்கள். ஆட்சிக்கு வந்தவுடன் 202-ல் 70% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்றார்கள். கடந்தாண்டு 90% என்றார்கள். தற்போது 80% நிறைவேற்றிவிட்டோம் என்கிறார்கள். தேர்தல் நெருங்கும்போது படிப்படியாக குறைந்து 20% ஆக நிற்கும்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு கொட்டிக்கிடக்கிறது என்கிறார்கள். அண்ணா பல்கலை., கோவை கல்லூரி பெண்களுக்கு ஏன் அப்படி நடந்தது. போக்சோ சட்டத்தில் அதிக வழக்குகள் பதிவாவது ஏன்? போதைப்பொருள் புழக்கம் கடுமையாக அதிகரித்து வருகின்றது.

தமிழகத்துக்கு முதலில் முழுநேர டிஜிபியை நியமனம் செய்யுங்கள். அதன்பிறகாவது சட்டம் - ஒழுங்கு கட்டுக்குள் வருகிறாதா என்பதை பார்ப்போம்” எனத் தெரிவித்தார்.

Summary

Stalin's regime is out of control! TVK Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.