இதையெல்லாம் தெரிந்ததால் முதல்வர் நேற்றே ரூ. 5,000 மகளிர் உரிமைத் தொகையை வழங்கினார். நாளையிலிருந்து காங்கிரஸ் கட்சியினர் யாரும் ஆட்சியில் பங்கு என்பதை பேச மாட்டார்கள். நேற்றைய அறிவிப்பில் இருந்து மக்களின் ஆதரவு திமுகவிற்கு அதிகம் இருப்பதை உணர்ந்து நாளையிலிருந்து யாரும் ஆட்சியில் பங்கு என்பதை பேச மாட்டார்கள். திட்டவட்டமாக தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பது கிடையாது. இதனை ஏற்கனவே முதலமைச்சர் தெளிவாக சொல்லிவிட்டார், காங்கிரஸ் கட்சியிலிருந்து மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, செல்வப் பெருந்தகை ஆகியோரின் கேள்விக்கு பதில் சொல்லலாம். எல்லாருடைய கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியாது.