

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மாநகரப் பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுகள் தற்காலிகமாக வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்துக்கழம் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், சென்னை மாநகர பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களில் (ETM) தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மின்னணு பயணச்சீட்டுகளை வழங்குவதில் தற்காலிகத் தடை ஏற்பட்டுள்ளது. எனவே, UPI, NCMC கார்டுகள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த முடியாது.
பிரச்னை சரிசெய்யப்படும் வரை அச்சிடப்பட்ட பயணச்சீட்டுகள் மட்டுமே வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை ஒன் செயலி சீராக செயல்படுகிறது என்றும் பயணிகள் இந்த செயலி மூலம் பேருந்து பயணச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.