பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கேப்டனின் ஆன்மா மன்னிக்காது! - பாஜக விமர்சனம்

திமுக - தேமுதிக கூட்டணி குறித்து பாஜக விமர்சனம்...

விஜயகாந்த், பிரேமலதா - கோப்புப் படம்

Published On :

தனது வாழ்நாள் முழுவதும் திமுகவை எதிர்த்தவர் விஜயகாந்த் என்றும் திமுகவுடனான தேமுதிக கூட்டணியை கேப்டனின் ஆன்மா மன்னிக்காது என்றும் தமிழக பாஜக விமர்சனம் செய்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தேமுதிகவை பொருத்தவரை, யாருடன் கூட்டணி என்பதில் இழுபறி நீடித்து வந்த நிலையில் இன்று திமுகவுடன் கூட்டணி என்பதை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உறுதி செய்துள்ளார்.

இதன்படி தேமுதிக முதல்முறையாக திமுக கூட்டணியுடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திமுக - தேமுதிக கூட்டணி குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தமிழக பாஜகவின் எக்ஸ் பக்கத்தில்,

"தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் விஜயகாந்த். அதனால், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், அவர் உருவாக்கிய தேமுதிக-விற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக. அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது!" என்று பதிவிடப்பட்டுள்ளது.

Summary

Vijayakanth opposed DMK all his life: Tamilnadu BJP criticizes DMK - DMDK alliance

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.