மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இடைக்கால பட்ஜெட் பதிலுரை: அதிமுக உறுப்பினர்கள் புறக்கணிப்பு!

இடைக்கால பட்ஜெட் பதிலுரையை புறக்கணித்த அதிமுக எம்எல்ஏக்கள்.

News image
கோப்புப்படம்
Updated On :20 பிப்ரவரி 2026, 4:08 am

இணையதளச் செய்திப் பிரிவு

சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் மீதான பதிலுரை இன்று(பிப். 20) நடைபெறவுள்ள நிலையில், அவைக்கு வராமல் அதிமுக எம்எல்ஏக்கள் புறக்கணித்துள்ளனர்.

இடைக்கால நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரின் இறுதிநாள் கூட்டம், பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது.

கூட்டத்தின் முதல் அலுவலாக 2026-27-ஆம் ஆண்டின் செலவுக்கான முன்பண மானிய கோரிக்கைகளை பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு முன்வைக்கவுள்ளார். தொடர்ந்து, 2025-26-ஆம் நிதி ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் பேரவையில் அளிக்கப்படும்.

பின்னர் இடைக்கால பொது நிதிநிலை அறிக்கை, இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான பொதுவிவாதத்துக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோா் பதில் உரையாற்றுகின்றனர்.

தொடர்ந்து, 2025-26-ஆம் நிதி ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் மீது விவாதமின்றி பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும். அதையடுத்து, 2025-26-ஆம் நிதி ஆண்டின் கூடுதல் செலவின மானிய கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்க சட்ட முன்வடிவு அறிமுகம் செய்து, ஆய்வு செய்யப்பட்டு, விவாதமின்றி நிறைவேற்றப்படும்.

பின்னர் 2026-27-ஆம் நிதி ஆண்டுக்கான செலவின முன்பண மானிய கோரிக்கைகள் மீது விவாதமின்றி வாக்கெடுப்பு நடத்தப்படும். தொடர்ந்து, 2026-27-ஆம் நிதி ஆண்டின் செலவினத்துக்கான முன்பண மானிய கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்க சட்ட முன்வடிவு அறிமுகம் செய்து, ஆய்வு செய்யப்பட்டு, விவாதமின்றி நிறைவேற்றப்படும்.

அதையடுத்து அரசின் மசோதாக்கள் நிறைவேற்றப்படும். அனைத்து அலுவல்களும் முடிந்த பின்னர் பேரவை காலவரையறையின்றி பேரவைத் தலைவரால் ஒத்திவைக்கப்படும்.

இதனிடையே, இடைக்கால பட்ஜெட் மீதான பதிலுரை இன்று(பிப். 20) நடைபெறவுள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் புறக்கணித்துள்ளனர்.

அதேபோல, பாஜக மற்றும் அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் சட்டப்பேரவைக்கு வரவில்லை.

summary

AIADMK MLAs have boycotted the interim budget debate in the Assembly, which is scheduled to take place today (Feb. 20).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.