பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு பற்றி...

News image
கனிமொழி - படம் - Express Library
Updated On :23 பிப்ரவரி 2026, 11:28 am

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியை தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இன்று சந்தித்துப் பேசியுள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதையொட்டி கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

நேற்று(பிப்.22) முதல்வர் ஸ்டாலினை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் சந்தித்துப் பேசியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக இன்று சென்னை சிஐடி காலனியில் உள்ள இல்லத்தில் திமுக எம்.பி. கனிமொழியை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்த சந்திப்பு பற்றி கிரிஷ் சோடங்கர் கூறுகையில். "

பல பிரச்னைகள் பற்றி பேசினோம். தொகுதிப் பங்கீடு குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இன்னும் தொகுதிகள் எண்ணிக்கை முடிவாகவில்லை. மாநிலங்களவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் பேசினோம். சரியான நேரத்தில் தொகுதிகள் எத்தனை என்பது குறித்து அறிவிப்போம். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது பற்றியும் பேசியுள்ளோம். ஆனால் அதைவிட தொகுதிப் பங்கீடு முக்கியம்" என்றார்.

கனிமொழி கூறுகையில், "முதலமைச்சரை கே.சி. வேணுகோபால் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசியுள்ளார். திமுகவில் பெண்கள் வீடு, வீடாகச் சென்று பிரசாரம் செய்கிறார்கள். மகளிருக்கான ஆட்சி இது, மகளிருக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சமூக அங்கீகாரத்திற்கான ஆட்சியாக இந்த ஆட்சி அமைந்துள்ளது. மகளிரின் உரிமைகளுக்காக வரும் தேர்தலில் பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவார்" என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.