பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு பற்றி...

News image

கனிமொழி - படம் - Express Library

Updated On :23 பிப்ரவரி 2026, 11:28 am

சென்னையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியை தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இன்று சந்தித்துப் பேசியுள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதையொட்டி கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

நேற்று(பிப்.22) முதல்வர் ஸ்டாலினை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் சந்தித்துப் பேசியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக இன்று சென்னை சிஐடி காலனியில் உள்ள இல்லத்தில் திமுக எம்.பி. கனிமொழியை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்த சந்திப்பு பற்றி கிரிஷ் சோடங்கர் கூறுகையில். "

பல பிரச்னைகள் பற்றி பேசினோம். தொகுதிப் பங்கீடு குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இன்னும் தொகுதிகள் எண்ணிக்கை முடிவாகவில்லை. மாநிலங்களவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் பேசினோம். சரியான நேரத்தில் தொகுதிகள் எத்தனை என்பது குறித்து அறிவிப்போம். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது பற்றியும் பேசியுள்ளோம். ஆனால் அதைவிட தொகுதிப் பங்கீடு முக்கியம்" என்றார்.

கனிமொழி கூறுகையில், "முதலமைச்சரை கே.சி. வேணுகோபால் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசியுள்ளார். திமுகவில் பெண்கள் வீடு, வீடாகச் சென்று பிரசாரம் செய்கிறார்கள். மகளிருக்கான ஆட்சி இது, மகளிருக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சமூக அங்கீகாரத்திற்கான ஆட்சியாக இந்த ஆட்சி அமைந்துள்ளது. மகளிரின் உரிமைகளுக்காக வரும் தேர்தலில் பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவார்" என்று தெரிவித்தார்.

Summary

Constituency distribution: Kanimozhi - Girish Chodankar meeting today for alliance discussion

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.